குனியமுத்தூர் – இடையர்பாளையம் சாலையில் உள்ள கருவேப்பிலை தோட்டம் அருகே, தனியாருக்குச் சொந்தமான பழைய கார் உதிரிபாகங்கள் வைக்கும் குடோன் ஒன்றில் இந்த கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனையின் போது, குடோனில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான கஞ்சா மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் சுமார் 100 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் அப்பாஸ், ஜென்னி ஜேக்கப், ரூபன் (மூவரும் கோவை) மற்றும் நவ்பில் (கேரளா) ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கும்பல் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இவர்களின் பின்னணியில் பெரிய நெட்வொர்க் ஏதேனும் உள்ளதா, கஞ்சா ஆந்திரா அல்லது பிற மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டதா என்பதையும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சம்பவ இடத்தைச் சுற்றிய பகுதிகளில் காவல்துறை கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதியில் இத்தகைய பெரிய அளவிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.



Leave a Reply