பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக கூட்டத்தில் கோவை மக்களை “பக்கத்து ஊரைக் கெடுப்பவர்கள்” என்று அவமரியாதையாக பேசியதாகக் கூறி தயாநிதி மாறனை கடுமையாக கண்டித்துள்ளார். அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிரித்துக்கொண்டு இருந்ததாகவும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். கோயம்புத்தூர் மக்கள் பண்பும் மரியாதையும் மிக்கவர்கள் என்றும், தமிழகத்தின் அனைத்து மாவட்ட மக்களைப் போலவே அவர்கள் தங்கள் கடின உழைப்பின் மூலம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் முக்கிய பொருளாதார பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்…