Tag: #dmk
-
அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த முதன்மை அமர்வு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்…
-
கோவையை சேர்ந்த வழக்கறிஞர் முத்து என்பவர் கடந்த மே 15ஆம் தேதி யூடுயூபர் சவுக்கு சங்கர் மீது முத்துராமலிங்கத் தேவர் பற்றி அவதூறாக பேசியதாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ஆகஸ்ட் 2ஆம் தேதி சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக காவலில் எடுத்து மூன்றுநாள் விசாரிக்க ரேஸ்கோர்ஸ் போலீசார் கோவை குற்றவியல் மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு…
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 15 முதலீட்டு ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் பங்கேற்ற்றனர். தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், முதலமைச்சர் வெளிநாடு பயணத்திற்கான ஒப்புதலை தமிழ்நாடு அமைச்சரவை வழங்கியது. அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு தலைமைச்செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
-
சுதந்திர தின விழாவையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கப் போவதாக திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. நாட்டின் 77வது சுதந்திர தினம் நாளை மறுநாள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சுதந்திர தின விழாவையொட்டி தமிழக ஆளுநர், அனைத்துக் கட்சிகளுக்கும் தேநீர் விருந்து வைப்பது வழக்கம். அந்தவகையில் நடப்பாண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அனைத்துக் கட்சிகளுக்கும் ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வைக்க உள்ளார். இதனையடுத்து இந்த தேநீர் விருந்தில் பங்கேற்கும்படி திமுக,…
-
இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசு வெளியிட்டுள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இந்தியாவில் உள்ள 100 தலைசிறந்த கலைக் கல்லூரிகளின் பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 37 கல்லூரிகள் இடம்பிடித்து உள்ளன. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில், NIRFRankings2024 இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது, தரமான…
-
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உருவம் பொறித்த நாணய வெளியீட்டு விழா ஆக. 17-ல் நடக்கிறது. இதில் பங்கேற்க திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மட்டுமின்றி எதிர்க்கட்சித் தலைவர்பழனிசாமி, பாஜக மாநில தலைவர்அண்ணாமலை உள்ளிட்டோருக்கும் அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, அவரது உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மதிப்புள்ள நாணயம் கடந்த ஜூன் 4-ம்…
-
உலக தமிழ் வளர்ச்சி மாநாட்டில் பெறப்படும் ஆலோசனைகளை பள்ளி, கல்லூரிகளில் செயல்படுத்த நடவடிக்கை எடுப்போம் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இரண்டாம் உலக தமிழ் வளர்ச்சி மாநாடு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,…
-
புதிதாக படித்து முடித்து வெளியே வரும் இளம் வாக்காளர்களை குறிவைத்து தான் புதுமைபெண், தமிழ்ப் புதல்வன் போன்றதிட்டங்கள் திமுகவால் கொண்டுவரப்பட்டுள்ளன என சீமான் காட்டம். படித்து முடித்து வெளியே வரும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுப்பது தான் சரியான திட்டம். அதைவிடுத்து குடும்பத்தில் அம்மா, மகன், மகள் என அனைவருக்கும் தனித்தனியாக ரூ.1000 வழங்குது என்பது திமுக அரசின் கடந்த 3 ஆண்டுகால சாதனைகளில் ஒன்றாக மட்டுமே இருக்குமென்றால், திமுகவை ஆயிரம் ரூபாய் அரசு என்று தான் கூறவேண்டும்…
-
கோவை உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே ரூ.481.9 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து அதனை பார்வையிட்டார். கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் – உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து உக்கடம் வரை சுமார் 3.8 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.481.95 கோடி…
-
உக்கடம் மேம்பாலம் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூபாய் 470 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆற்றுப்பாலம் உக்கடம் மேம்பாலத்தை திறந்து வைக்க உள்ளார் இப்படத்தில் இருந்து பொள்ளாச்சி பாலக்காடு பேரூர் செல்வபுரம் ஆகிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர்களுக்கு விரைந்து செல்லும் வகையில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது உக்கடம் பேருந்து நிலையம் அருகில்…