,

சென்னையில் புதிய தலைமைச் செயலகம்: முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Spread the love

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின் போது, தலைநகர் சென்னையில் சுமார் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

தற்போதுள்ள தலைமைச் செயலகம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 30-க்கும் மேற்பட்ட துறைகளும் 6,000-க்கும் அதிகமான ஊழியர்களும் இயங்கி வரும் சூழலில், அதிகரித்து வரும் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் இடநெருக்கடியைக் கருத்தில்கொண்டு இந்த அதிநவீன புதிய வளாகம் உருவாக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.