நீட் தேர்வில் தமிழக மாணவன் சாதனை

Spread the love

நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த சூரிய நாராயணன் அகில இந்திய ரேங்கில் 27வது இடம் பிடித்துள்ளார்.

மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவப் படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. தேசியத் தேர்வு முகமை (என்டிஏ) ஆண்டுக்கு ஒரு முறை இந்த நீட் தேர்வை நடத்தி வருகிறது.

நடப்பாண்டு தேசிய தேர்வு முகமை நடத்திய நீட் தேர்வுக்கு 22,76,069 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். விண்ணப்பம் செய்தவர்களில் 22,09,318 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 66,751 பேர் தேர்வு எழுதவில்லை. வெளிநாடுகள் உட்பட 506 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. தமிழ் மொழியில் 26580 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து 135715 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில் அவர்களில் 76,181 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் https://neet.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. முடிவுகளின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் இன்னும் சிறிது நேரத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை சேர்ந்த சூரிய நாராயணன் அகில இந்திய ரேங்கில் 27 இடம் பிடித்துள்ளார்.

நீட் தேர்வு எழுதியவர்களின் மதிப்பெண் பட்டியல் அவர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் தாங்கள் அளித்த மின்னஞ்சலை பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்