கோவை மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மழை முன்னேற்பாடுகள் நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரி விதிப்பை திரும்ப பெற வலியுறுத்தி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி.அருண்குமார், கே.ஆர்.ஜெயராம், செ.தாமோதரன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோருடன் சென்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
பின்னர் எஸ்.பி. வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும், கோவை மாநகரில் பாதாள சாக்கடை திட்டத்திற்காகவும் குடிநீர் விநியோக திட்டத்திற்காகவும் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர் என்பதால் அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து மனு கொடுத்துளோம், என கூறினார்.
மாவட்டத்தில் மழையால் விவசாய பகுதிகளில் வாழை உட்பட பல பயிர்கள் பாதிக்கபட்டுள்ளது , எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் சிறுவாணி தண்ணீரை கேரள அரசு அடிக்கடி அணையில் இருந்து வெளியேற்றுகிறது எனவும், கோவை மாவட்ட நிர்வாகம் அதை தடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என தெரிவித்த அவர், தற்போது மழை பெய்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கும் சூழலில், இப்போது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
கோவை மாநகரில் குப்பை எடுப்பதில்லை, நோய் வருகின்றது இதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், வெள்ளலூர் பேருந்து நிலையம் 40 % பணிகள் முடிந்துள்ள நிலையில் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த கோரிக்கைகள் மீது அதிகபட்சமாக 10 நாட்களில் நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
Leave a Reply