உதகை தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் கோடை விடுமுறையை முன்னிட்டு நடைபெறும் மலர் கண்காட்சி, இதுகுறியாக 127ஆவது ஆண்டில், மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சிறப்பாக தொடங்கப்பட்டது. 11 நாட்கள் நடைபெற உள்ள இந்த மலர் கண்காட்சி, சுற்றுலா பயணிகள் மற்றும் பூக்கலை ரசிகர்களை ஈர்க்கும் வகையில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களுடன் தயாராகியுள்ளது.
துவக்க விழாவுக்காக பூங்காவுக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த வண்ணமயமான மலர் அலங்காரங்களை பார்வையிட்டு ரசித்தார். மேலும், மலர்களால் உருவாக்கப்பட்ட சிம்மாசனத்தில் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது கண்காட்சியின் முக்கிய அம்சமாக கவனம் ஈர்த்தது.
அமைச்சர்கள் சிலரும் முதல்வருடன் மலர் சிம்மாசனத்தில் அமர்ந்து புகைப்படம் எடுத்தனர். பாரம்பரியத்துடன் ஒத்துப்போகும் வகையில் பூங்கா முழுவதும் மலர்களின் வண்ண விழா இடம்பெற்று, பார்வையாளர்களுக்கு பார்வை விருந்தாக அமைந்துள்ளது.
Leave a Reply