கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை கோயில் அடிவாரத்தில் உள்ள மடத்தில் இரண்டரை கிலோ வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு லட்சம் மதிப்பிலான வெள்ளி வேல் திருட்டு போயிருந்த நிலையில், வடவள்ளி போலீசார் திருடிய நபரை தீவிரமாக தேடி வந்தனர்.
மேலும், சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு நடத்திய விசாரணையில் பல்வேறு ஊர்களில் மடத்திற்கு சென்று தங்கும் பழக்கம் உடைய வெங்கடேஷ் சர்மா என்ற நபர் வெள்ளி வேலை திருடியுள்ளார் என தெரிய வந்தது.தலைமறைவாக இருந்த சாமியார் வெங்கடேஷ் சர்மாவை போலீசார் கைது செய்தனர்.
Leave a Reply