வக்ஃப் போர்டு உருவானது எப்படி?

waqf board
Spread the love

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதாவை பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அரசு தலையிடுவதாகவும், அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்கான யுத்தி இது’ என்றும் எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சரி இந்த வக்பு போர்டு உருவானது எப்படி என்று பார்க்கலாம். வக்ஃப் என்பது வகுஃபா என்ற அரபு வார்த்தையிலிருந்து வந்தது. வகுஃபா என்பது `நன் கொடையாக வழங்கப் படும் சொத்துக்கள்’ என்ற அர்த்தத்தை கொண்டது. அதன்படி, வக்ஃப் என்பது பக்தி, மதம் அல்லது தொண்டு ஆகியவற்றுக்கு நிரந்தர நன் கொடையாக அளிக்கப் படும் அசையும் மற்றும் அசையா சொத்துகள்.இந்தச் சொத்துக்களை யாருக்கும் விற்காமல், யாருக்கும் இலவசமாக அன்பளிப்பாக வழங்காமல், அதன் மூலம் வரும் வருமானத்தை அல்லாவின் பாதையில் அடுத்த சந்ததியினர், ஏழைகள் என மனிதர்களின் நலன்களுக்கு செலவு செய்வதுதான்.
இத்தகைய சொத்
துக்கள், இது இரண்டு வகைகளில் கொடுக் கப்படும்.ஒன்று அல்லாவின் பெயரால் வழங்கப்படுவது.மற்றொன்று நன்கொடை யாக வழங்கப்படுவது.இரண்டாம் வகை சொத்துகளை நன்கொடை வழங்கியவரின் வாரிசுகள் பராமரிப்பார்கள். அதேசமயம், முதலாவது வகையில் வழங்கப்பட்ட நன்கொடையை யாரும் உரிமை கொண்டாட முடியாது.
இரண்டாவது வகையான நன்கொடைக்கு வாரிசுகள் அதை நிர்வகிக்கும் உரிமையை கோர முடியும். குறிப்பாக, இந்த வக்ஃப் சொத்துக்களை விற்கவோ, வேறு யாருக்கும் தானமாக வழங்கவோ முடியாது.அந்த சொத்துக்கள் மூலம் வரும் வருமானத்தில் கல்வி நிறுவனங்கள், மசூதிகள், தங்குமிடங்கள் போன்றவற்றுக்கு நிதியளிக்கப்படுகிறது.
இந்தச் சொத்துக்களை நிர்வகிக்கவே வக்ஃப் அமைப்புகள் நிறுவப் பட்டன. மொகலயார்கள் ஆட்சிக்காலத்திலிருந்தே இது நடைமுறையில் உள்ளது.
திருத்தப்பட்ட சட்டம் சொல்வது என்ன?
தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை கிளம்பியிருக்கிறது வக்பு வாரிய திருத்த சட்டமசோதா. இதில் யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் வெளியாகி சூட்டை கிளப்பியுள்ளது. குறிப்பாக வக்ஃப் வாரியங்களிடம் 8.72 லட்சம் கோடி சொத்து
கள் உள்ளது. வக்பு சொத்துகளை முறைப்படி பதிவு செய்ய வேண்டும். ஏழை முஸ்லிம்கள் பலன் அடைய வேண்டும். மேலும் வெளிப்படைத்தன்மை, பொறுப்பு, நேர்த்தி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் வக்பு சட்ட திருத்த மசோதா வரையறுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் திருச்செந்துறை கிராமம் முழுவதுமே வக்பு வாரியத்துக்கு சொந்தம் என பிரச்சனை எழுந்தது 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி திருக்கோயிலும் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என கிராம மக்கள் தலையில் இடியை இறக்கினார்கள். கேரளாவில் 600 குடும்பங்களின் நிலங்களை வக்பு வாரியம் சொந்தம் கொண்டாடுகிறது. இதை எதிர்த்து கத்தோலிக்க பேராயர்கள், பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றன. நாடாளுமன்ற கட்டிடம் இருக்கும் இடம் வக்ஃப் வாரியத்துக்கு சொந்த
மானது என்று ஒருசாரார் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்சினை களுக்கு தீர்வு காணவே வக்பு சட்ட திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் தான் வக்ஃப் வாரிய சட்டதிருத்த மசோதா. இரு அவைகளிலும் வெற்றிகரமாக சட்ட மாக்கபட்டது.
மக்களவையில் இது எளிதாக வென்றது ஆனால் ராஜ்ய சபாவில் நிறைவேறுமா என கேள்விகள் எழுந்தது ராஜ்யசபாவில் 125 வாக்குகளுடன் சட்டம் நிறைவேற்றபட்டது.
இதற்கு முன், சன்னி வக்ப் வாரியத்
தில் சன்னி முஸ்லிம்
கள் மட்டுமே உறுப்
பினர்களாக முடி
யும். ஷியா வாரியத்
தில் ஷியா முஸ்லிம்
கள் மட்டுமே உறுப்பினர்களாக முடியும்.அவை எல்லாம், இந்த மசோதாவில் மாற்றப்பட்டுள்ளன. அனைத்து தரப்பையும் உள்ளடக்கியதாகவும், முழுக்க முழுக்க மதச்சார்பின்மையுடன் கூடிய அமைப்பாகவும், வக்பு வாரியம் இனி இருக்கப் போகிறது புதிய சட்டத்தின்படி, சன்னி, ஷியா, போரா, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள், பெண்கள், முஸ்லிம் அல்லாத முக்கியஸ்தர்கள் என பலரும், வக்பு வாரியத்தில் இடம் பெறுவர். வாரியத்தின் குழுவில், குறைந்தபட்சம் முஸ்லிம் அல்லாத நான்கு பேர், இரண்டு பெண்கள் கட்டாயம் இடம் பெறுவர்.