காதல் தோல்விக்குப் பிறகு ஆட்டை திருமணம் செய்த இளைஞர்

marriage
Spread the love

பொதுவாக, காதல் தோல்வியை சந்தித்த இளைஞர்கள் தங்களுடைய வாழ்க்கையை தொடர்ந்து, பின்னர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதுண்டு. சிலர் அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், விபரீத முடிவுகள் எடுப் பதும் நடக்கிறது. மேலும், சிலர் திருமணமே செய்து கொள்ளாமல் வாழ முடிவெடுக்கிறார்கள்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான பகவான் சிங் என்ற இளைஞர், காதல் தோல்வியை சந்தித்த பிறகு, ஆடு ஒன்றை திருமணம்
செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரி யத்தில் ஆழ்த்தியுள்ளது.
தான் வளர்த்து வந்த ஆட்டின் கழுத்தில் மாலையிட்டு, அதை இந்து முறைப்படி திருமணம் செய்து, அதற்கு பொட்டு வைத்து புது கியை தொடங்கியுள்ளார். மேலும், அந்த ஆட்டிற்கு “பூஜா” என பெயரிட்டு, இது தான் தனது வாழ்க்கைக்கான சிறந்த முடிவு என பகவான் சிங் தெரிவித்துள்ளார்.
“நான் இந்த ஆட்டைப் பல மாதங்களாக வளர்த்து வருகிறேன். அது என்னுடன் மிகவும் நெருக்கமாக உள்ளது. இதனால் தான் இந்த முடிவை எடுத்தேன்” என்று அவர் கூறியுள்ளார். இந்த விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *