அந்தமான் சென்டினல் தீவுக்கு சென்ற அமெரிக்கர் கைது… என்ன நடந்தது?

andaman nicobar islands
Spread the love

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரு தடைசெய்யப்பட்ட தீவுக்குள் சென்றதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த நபர் கைது செய்யப் பட்டுள்ளார்.
மிகைலோ விக்டோரோ விச் பாலியாகோவ் என்ற 24 வயது இளைஞர், கூர்ம தேரா கடற்கரையில் இருந்து எந்த அனுமதியும் இல்லாமல் பழங்குடி தீவான வடக்கு சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார்.பழங்குடி மக்களுக்கு அளிப்பதற்காக தேங்காயும், கோலா பானங்களும் கொண்டு சென்றுள்ளார். சென்டினல் தீவில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக அழைந்து திரிந்துள்ளார். ஆனால் அவர் எந்த பழங்குடி களையும் பார்க்கவில்லை.பின்னர் கொண்டுவந்த பொருள்களை கடற்கரையில் வைத்து விட்டு, கடற்கரை மண்ணை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அவரை விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
பிரிட்டிஷ் காலத்தில் அந்தமான் சிறையில் இருந்து தப்பித்த ஒரு கைதி வடக்கு சென்டினல் தீவில் அம்புகள் ஏவப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அதுதான் சென்டினலிஸ் பழங்குடிகளின் முதல் பதிவுசெய் யப்பட்ட கொலை.அதன்பிறகு 2006-ல் இரண்டு மீனவர்கள், 2018-ல் சட்டத்துக்கு புறம்பாக தீவுக்குச் சென்ற அமெரிக்கர் எனப் பலர் சென்டினலிஸ் மக்களால் கொல்லப்பட்டுள்ளனர். பதிவு செய்யப்படாத எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்கின்றனர்.
சென்டினலிஸ் மக்கள் வெளி ஆள்களை சிறிதும் அனுமதிப்பதில்லை. இவர்கள் மிகச் சிலமுறையே வெளியுலக மனிதர்களை சந்தித்துள்ளனர். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படியும், இந்த தீவில் எத்தனை பேர் வாழ முடியுமென்ற மானுடவியலாளர்களின் மதிப்பீடுகளின் அடிப்படை யிலும், வடக்கு சென்டினல் தீவில் 80 முதல் 150 பேர் வரை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. கடந்த 1967 -ல் சென்டினலிஸ் கிராமத்திற்கு ஒரு முறை சென்றதன் அடிப்படையில், அவர்கள் சாய்ந்த கூரையுடன் கூடிய சிறிய குடிசைகளில் வாழ்கிறார்கள் என்பதை பண்டிட் தலைமையிலான குழு தெரிவித்தது.
பொதுவாக இந்த மக்கள் வேட்டையாடி உயிர் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறை அந்தமானின் பிற மக்களைப் போன்றது என்றாலும், அவர்கள் தீவில் வளரும் பழங்கள் மற்றும் கிழங்குகள், கடற்பாசிகள் அல்லது ஆமைகளின் முட்டைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் அல்லது பறவைகள் போன்றவற்றை உண்டு வாழ்கின்றனர்.