மூளைச்சாவடைந்த  18 வயது கல்லூரி மாணவன் 5 பேருக்கு  மறுவாழ்வு அளித்தார்!

kmch
Spread the love

திரு.N .யாதவ் வயது 18  இவர்  ஈரோடு  மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி, நல்லூரில் அவரது பெற்றோர் திரு. நாகராஜன்    திருமதி. விஜயலட்சுமி  மற்றும் அக்கா  திருமதி.மோனிஷா  அவர்களுடன்  வசித்துவந்தார்.  இவர் கடந்த 19.03.2025ஆம் தேதி இரவு 8.45 மணி அளவில் இரண்டு சக்கர  வாகனத்தில்  சாலையில் சென்றுகொண்டிருக்கும் பொழுது பொள்ளாச்சி சாலை, ஈச்சனாரி   அருகில்   எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு  பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு. பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை, அவிநாசி ரோடு கே.எம்.சி.ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரது உடல் நிலையில் எந்த வித  முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் கடந்த 22.03.2025-ஆம் தேதி அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டது . அதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர் திரு. நாகராஜன்    திருமதி. விஜயலட்சுமி  மற்றும் அக்கா  திருமதி.மோனிஷா ஆகியோர் திரு.N .யாதவ் அவர்களின்  உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தார்கள்.  தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது கல்லீரல், சிறுநீரகங்கள், தோல் மற்றும் எலும்பு, ஆகியவை தானமாக பெறப்பட்டது. கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனைக்கும், தோல் மற்றும் எலும்பு,  கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.

கே.எம்.சி.ஹெச் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள்  உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர்

இது குறித்து கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல பழனிசாமி அவர்கள் கூறுகையில், மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரைக் காப்பாற்ற உதவும். பின்னர்  உடல் உறுப்பு தானம் வழங்கிய திரு.N. யாதவ்  குடும்பத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று  கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *