டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா

Spread the love

டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா, டாக்டர் என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில்  நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக கணினி அறிவியல் துறை டீன் டாக்டர்.டி.பழனிக்குமார் வரவேற்புரை வழங்கினார். டாக்டர் என்.ஜி.பி.ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் தலைவர், டாக்டர் நல்ல.ஜி.பழனிசாமி தலைமை வகித்தார்.

தலைமை விருந்தினராக காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் கோயம்புத்தூர் மையத் தலைவர் மாயா ஸ்ரீகுமார் மற்றும் கௌரவ விருந்தினராக கோயம்புத்தூர் சிவா டெக்ஸ்யார்ன் லிமிடெட் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரராமன் கே. எஸ். ஆகியோர் கலந்துகொண்டு பட்டமளிப்பு விழாவின் சிறப்புரையை வழங்கினார்கள்.

நடப்புக் கல்வியாண்டுக்கான  ஆண்டறிக்கையை, என்ஜிபி தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர்  டாக்டர். எஸ்.யு.பிரபா சமர்ப்பித்தார். டாக்டர் என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் கல்லூரிச் செயலாளரும் அறங்காவலருமான டாக்டர் தவமணி. டி.பழனிசாமி பட்டமளிப்பு விழாவின் வாழ்த்துரையை வழங்கிச் சிறப்பித்தார்கள்.

டாக்டர்.என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் அறங்காவலர்களில் ஒருவரான டாக்டர் அருண் என். பழனிசாமி பட்டம் பெற்ற மாணவ, மாணவியர்களை வாழ்த்திப் பேசினார்கள். இந்தப் பட்டமளிப்பு விழாவில்  வெவ்வேறு பாடப் பிரிவுகளில் இருந்து இளநிலை பட்ட வகுப்புகளில் பயின்ற மாணவ, மாணவியர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றனர். இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் அனைத்துத்  துறைத் தலைவர்களும் பேராசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.