, , ,

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 36 மணி நேர ஹேக்கத்தான்

Spread the love

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வனத்துறை கோவை வனப்பிரிவுடன் இணைந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் “மனித-விலங்கு மோதலுக்கான புதுமையான தீர்வுகள்” என்ற தலைப்பில் “36 மணிநேர ஹேக்கத்தான்” நடைபெற்றது.
இதனை கோவை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் சதிஷ் கலந்துகொண்டு நிகழ்வை துவக்கி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் சௌந்தரராஜன் முன்னிலை வகித்தார்.
யானைகள் மற்றும் பிற விலங்குகள் பெரும்பாலும் உணவு மற்றும் தங்குமிடம் தேடி விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து விடுகின்றன, இதனால் விவசாயிகள், பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சேதங்கள், காயங்கள் மற்றும் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன.  எனவே, மனித – வனவிலங்கு மோதல்களைத் தவிர்க்க, புதுமையான, தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளை உருவாக்க, ஆர்வமுள்ள தனிநபர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றிணைத்து சரியாக தீர்வுகளை கொண்டுவருவதே இந்த ஹேக்கத்தான் நோக்கமாகக் கொண்டு நடைபெற்றது
முன்னதாக, பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 170 அணிகள் பங்குபெற்று பல்வேறு தீர்வுகளை முன்வைத்தனர். அவற்றுள் 21 அணிகள் தேர்வுபெற்று 36 மணிநேர போட்டியில் கலந்துகொண்டு தங்களின் தீர்வுகளை சமர்ப்பித்தனர். நடுவர்களாக  ரூட்ஸ் நிறுவனத்தின் மூத்த பொதுமேலாளர் சம்பத்குமார் மற்றும் விஸ்டேன் நிறுவனத்தின் குளோபல் ரிசோர்ஸ் மேனேஜ்மென்ட் லீடர் புருஷோத்தமன் கலந்துகொண்டு சிறந்த தீர்வுகளை தேர்வுசெய்தனர்.
தொடர்ந்து கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு முதலிடம் பிடித்த ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, 2ம் இடம் பிடித்த சென்னை செயின்ட் ஜோசப் இன்ஜினியரிங் கல்லூரி அணிகளுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்தினர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வனத்துறை தலைமையக வனஉதவி காப்பாளர் கிரிஷ் பால்வே, ஆசிய யானைகள் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி நவீன், கல்லூரியின் கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா, தகவல்தொழில் நுட்பத்துறை, புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.