சங்கீதா தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்த நிலையில், இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களும் கல்லூரிக்கு சென்றிருந்த நேரத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தினை தொடர்ந்து, சூலூர் போலீசார் சங்கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பினர். அதேபோல், பாலக்காடு மாவட்ட போலீசார் கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி பாலக்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், சங்கீதா முன்னதாக ஒரு மருத்துவருடன் உறவில் இருந்ததாக கிருஷ்ணகுமார் சந்தேகித்ததாகவும், இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. சங்கீதா தனது கணவரின் கோபத்தைக் கருத்தில் கொள்ளாமல் இருந்ததை தொடர்ந்து, ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் முதலில் சங்கீதாவை சுட்டுக் கொன்றுவிட்டு பின்னர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக, இரு தரப்பு உறவினர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply