திருமணத்தை மீறி அடுத்த ஜோடி : கிளீடன் செயலி கண்ட அதிர்ச்சி வளர்ச்சி!

Spread the love
நவீன மாற்றத்திற்கு உதாரணமாக தற்போது வெளியான ஒரு செயலியின் ஆய்வு அறிக்கை பார்ப்போருக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்துள்ளது. எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ( எனும் டேக் லைனோடு உருவாக்கப்பட்டுள்ள  கிளீடன் (Gleeden) எனும் செயலி  2024-ல் 270% வளர்ச்சியை கண்டுள்ளது.இந்த கிளீடன் செயலி தனியாக இருப்பவர்கள், திருமணமானவர்கள், விவாகரத்து பெற்றவர்கள், ஓரினசேர்க்கையாளர் என அனைவருக்குமான ஒரு டேட்டிங் செயலி என வரையறை செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது பெண் பயனர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது என சமீபத்திய அறிக்கை வெளிக்காட்டியுள்ளது.

அந்த செயலி நிறுவனத்தினர் வெளியிட்ட அறிவிப்பின்படி, தற்போது வரை இந்த கிளீடன் செயலியை சுமார் 30 லட்சம் பேர்  பதிவிறக்கம் செய்துள்ளனர். முந்தைய ஆண்டுடன் ஒப்பீடு செய்கையில் 270% வளர்ச்சியை இந்த செயலி கண்டுள்ளது. இதில் பெண் பயனர்களின் எண்ணிக்கை 128%ஆக உள்ளது.

இந்த செயலியை பயன்படுத்துவதில் பெண்கள் 58% பேர் ஆவார்.  இந்த செயலியை பயன்படுத்துவதில் 40% பேர் தினமும் 45 நிமிடங்கள் உபயோகம் செய்கின்றனர் என செயலி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச்செயலியை அதிகம் பயன்படுத்துவோர் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

இந்த செயலியை பயன்படுத்துவதில் பெரும்பாலும் மெட்ரோ நகரங்களே முன்னணியில் உள்ளனர். பெங்களூரு (20%), மும்பை (19%), கொல்கத்தா (18% ) மற்றும் டெல்லி (15%)  என அடுத்தடுத்த லிஸ்டில் அந்தந்த நகரங்கள் உள்ளன. போபால், வதோதரா, கொச்சி போன்ற சிறிய நகரங்களில் இந்த செயலியின் வளர்ச்சி அதிகமாக இருக்கிறது .அடுத்த வருடம் இந்த செயலியை 50 லட்சம் பேர்  பயன்படுத்துவார்கள் என தெரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான க்ளீடன் செயலி மேலாளர் சிபில் ஷிடெல் கூறுகையில், ” இந்தியா எப்போதுமே கிளீடனுக்கு ஒரு முக்கிய சந்தையாக இருந்து வருகிறது, 30 லட்சம் பயனர்களின் பதிவிறக்க எண்ணிக்கையானது வளர்ச்சியடைந்து வரும் உணர்வுகளுக்கு ஒரு சான்றாகும். பெண் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இன்றைய உலகில் பாதுகாப்பு, விவேகம் மற்றும் நமது ஜோடியை தேர்வு செய்யும் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்கும் தளங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது,” என கூறியுள்ளார்.