இதனால் ஒருகட்டத்தில் உச்சகட்ட மனவேதனை அடைந்த பொன்மணி, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவரின் சந்தேகம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார். மகளின் இறப்பு பொன்மணியின் பெற்றோருக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பொன்மணியின் மறைவுக்கு பின்னர், தம்பதியின் 5 வயது மகனை, பொன்மணியின் பெற்றோர் தங்களுடன் அழைத்து சென்றுவிட்டனர். மனைவி உயிரிழந்த துக்கம் இல்லாத சிவா, சில மாதங்களுக்கு முன்பு ரஞ்சிதா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மேலும், முதல் மனைவியின் பெற்றோர் பராமரிப்பில் இருந்த சிறுவனையும், சண்டையிட்டு தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனால் ஆவேசமான பொன்மணியின் சகோதரர் அர்ஜுனன், சம்பவத்தன்று இரண்டாவது மனைவியுடன் திருமண விழாவிற்கு வந்த சிவாவை நேரில் பார்த்துள்ளார். உச்சகட்ட ஆவேசத்திற்கு சென்ற அர்ஜுனன், தங்கை பலியான துக்கம் இல்லை, அவளின் குழந்தையையும் எடுத்துக்கொண்டாய் இப்போது மனைவியுடன் கொண்டாட்ட பயணமா என்று மனதுக்குள் ஆத்திரத்தில் உச்சிக்கு சென்றார்.
பின் மனைவியுடன் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்த சிவாவை நோட்டமிட்டு, நடுவழியில் இடைமறித்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ReplyForward |
Leave a Reply