இலவச கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டம் கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது.
கோவை மேற்கு ரோட்டரி கிளப் மற்றும் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையுடன் இணைந்து, கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி திட்டமான “சிங்கப்பெண்ணே” கோவை ராயல் கேர் மருத்துவமனையில் இன்று தொடங்கியது.
இந்தத் திட்டம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கும், முன்கூட்டியே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமாகக் கொண்டு எச். பி. வி தடுப்பூசியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டத்தின் மொத்த செலவு ரூ. 44 லட்சம். சுமார் ரூ. 3000 மதிப்புள்ள தடுப்பூசி ஒவ்வொரு பயனாளிகளுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை Rtn.AKS.ADV.டாக்டர்.N. சுந்தரவடிவேலு மாவட்ட ஆளுநர் கோவை மாவட்டம் 3201 ( சுழற் சங்கம் இந்தியா) தொடங்கி வைத்து, பெண்களின் சுகாதார சேவையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். கவுரவ விருந்தினர்களாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் Dean டாக்டர் ஏ. நிர்மலா அவர்களும் மற்றும் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கே. மாதேஸ்வரன் ஆகியோர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் குறைப்பதில் தடுப்பூசியின் பங்கு குறித்து எடுத்துரைத்தனர். ரோட்டரி தலைவர் Rtn.PHF. S. ராஜேந்திரன் மற்றும் Rtn. MPHF பி. மோகன் சந்தர் (செயலாளர்) இது போன்ற பயனுள்ள முன்முயற்சிகள் மூலம் சமூக சுகாதாரத்திற்கான ரோட்டரியின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
இந்தத் திட்டத்தில் விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்கள் அடங்கும்.இத்திட்டமானது கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்களின் சுகாதாரம் மேம்பாட்டை உறுதி செய்கிறது.
Leave a Reply