தருமபுரம் உலக சைவ நன்னெறி கழகத்தின் சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பங்கேற்று விருதுகளை வழங்கினார்.
இந்த விழாவில் சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு “பாகிரதி” விருது, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணனுக்கு”தெய்வநெறித் தோன்றல்” விருது, கோவை மூத்த வழக்கறிஞர் என்.வி.நாகசுப்பிரமணியனுக்கு “அருள்நெறிச் செல்வர்” விருது, சங்கரா கண் மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் பத்ம ஸ்ரீ டாக்டர் ரமணிக்கு ” கண்ணொளி வித்தகர்” விருது, விஜயா பதிப்பகம் நிறுவனர் மு.வேலாயுதமுக்கு “நூல்நெறி வித்தகர் விருது, சைவப்பெருமக்கள் பேரவை பொருளாளர் மாரியப்பனுக்கு ” சைவநெறிச் செம்மல்” விருது மற்றும் “அருள்நெறி நாவரசி” விருது கல்வியாளர் மனோன்மணிக்கு வழங்கப்பட்டது.
தருமபுரம் உலக சைவ நன்னெறி கழகத்தின் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் எம்.கிருஷ்ணனுக்கு”தெய்வநெறித் தோன்றல்” விருது, சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகனுக்கு “பாகிரதி” விருது

Leave a Reply