கடந்த 2022 ஆம் ஆண்டு வளைகுடா நாடான கத்தாரில் பிரமாண்டமாக உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. 2026 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது . இந்த தொடரில் முதன் முறையாக 48 அணிகள் பங்கேற்கவுள்ளன. இதையடுத்து, 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் நடந்தும் நாடுகள் குறித்த பிபா கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை கால்பந்து தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவடையும், 2030 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் , போர்ச்சுகல் , மொரோக்கா, ஸ்பெயின் மற்றும் 3 தென் அமெரிக்க நாடுகள் என 6 நாடுகளில் நடைபெறுகிறது. அடுத்து 2034 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடர் சவுதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.
2034 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் உலகக் கோப்பை கால்பந்து போட்டி

Leave a Reply