நாட்டின் குடியரசு தினவிழா, வரும் ஜனவரி 26-ம் தேதி நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தலைநகர் புதுடெல்லியில், பிரமாண்ட அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அன்று நடைபெற உள்ளது. இதற்காக முப்படையினர், காவல்துறையினர், தேசிய மாணவர் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் கணக்கியல் மற்றும் நிதியியல் இரண்டாமாண்டு மாணவி என்.வி. பவ்யா, குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மாணவி என்.வி. பவ்யாவை, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமிநாராயணசுவாமி வாழ்த்தினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் எஸ்.பிரகதீஸ்வரன் ஆகியோரும் பாராட்டினர். புதுடெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 9-ஆவது முறையாகத் தேர்வு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply