, , , , ,

கோவை காங்கிரஸ் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி தவறி விழுந்து உயிரிழப்பு

Spread the love

கோவை மாநகராட்சி 56வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி நேற்றிரவு பட்டணம் அருகே உள்ள நொய்யல்
ஆற்றுப் பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக முதல்கட்டமாக கூறப்படுகிறது.
இது குறித்து போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சூலூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கிருஷ்ணமூர்த்தி மது அருந்தி இருந்ததாக கூறப்படும் நிலையில் பாலத்தின் மேலே நின்று கொண்டிருக்கும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தியின் உயிரிழப்பு குறித்து சூலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.