கேஎம்சிஎச் மருத்துவமனை சார்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக முதலுதவி பயிற்சி முகாம் பொள்ளாச்சியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பயிற்சி முகாமில் நடைபெற்றது.
ஒருவருக்கு இருதய செயல்பாடு திடீரென்று நின்றுவிடும் போது அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பாக அவரின் அருகில் இருப்பவர்கள் தகுந்த முதலுதவி அளிப்பதன் மூலம் அவரின் உயிரை காப்பாற்ற முடியும் என்பதை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மருத்துவர்கள் செயல் விளக்கத்துடன் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு செய்து காட்டினார்கள். இந்த செயல் விளக்க முதலுதவி பயிற்சியை கே.எம்.சி.எச் மருத்துவமனை நடத்தியது.
கேஎம்சிஎச் மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி தலைவர் கூறுகையில், “ஒருவருக்கு திடீர் இதயத்துடிப்பு முடக்கம் ஏற்பட்டால், அவருடன் இருப்பவர்கள் இந்த CPR என்ற முதல் உதவி செய்யும்பொழுது அவரின் உயிரை காப்பாற்றுவதற்கு அதிக வாய்ப்பாக அமைகிறது. இந்த எளிய பயிற்சியை விழிப்புணர்வு மூலம் பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக இவ்வாறு பல நிகழ்ச்சிகளை கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. கே.எம்.சி.ஹெச்.மருத்துவமனை இப்பகுதியில் ஒரு சிறந்த அவசரகால சிகிச்சை மருத்துவமனையாக செயல்படுகிறது” என்று கூறினார்.
Leave a Reply