, ,

தேசிய வேளாண் நிறுவனம் செய்து கொடுத்தஒப்பந்தத்தின் அடிப்படையில் விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது…..

Madurai93
Spread the love

மதுரை மாவட்டம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு சென்னை தேசிய வேளாண் நிறுவனம் செய்து கொடுத்த வாழை கொள்முதல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல்கட்டமாக விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டது. தமிழ்நாடு நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் சுமார் 511 வாழை தார்கள் ரூ. ஒரு லட்சத்து 20 ஆயிரத்திற்கு விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அருப்புகோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்திற்க்கு அனுப்பப்பட்டது. இதில் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி, அறிவுறுத்தலின்படி மதுரை கோட்டம் வேளாண்மை அலுவலர் மலர்விழி, மற்றும் வேளாண் அலுவலர் மீனா (உசிலம்பட்டி கோட்டம்), உதவி வேளாண் அலுவலர் சங்கர் கணேஷ் முன்னிலையில் அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தலைவர் தனிராஜன், இயக்குநர்கள் அனுமதிபாண்டி, தங்கராஜ், அலங்காநல்லூர் பசுமை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு வாழையில் சந்தை வாய்ப்புகளை ஏற்பாடு செய்து தந்த சென்னை தேசிய வேளாண் நிறுவனத்தின் அணித்தலைவர் முருகானந்தவேல், அருள்குமார் மற்றும் முருகன், நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ராஜபாண்டி, ஆகியோர் கலந்து கொண்டனர்.