, , ,

கோவையில் ஒன்றிய அரசை கண்டித்து அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு…..

MMK
Spread the love

கோவையில் இன்று 24.7.2024 காலை 10. மணி அளவில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்தும் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்த பிஜேபி அரசை கண்டித்து காதில் பூ சுற்றி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய ஒன்றிய நிதிநிலை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்த நிலையில் அறிக்கையில் தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் புறக்கணித்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தார். இதை கண்டித்து கோவையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் தந்தை பெரியார் திராவிட மாநில பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் A.இப்ராஹிம் அவர்கள் தலைமையில் , மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் மு. ஆஷிக் அகமது சிறப்புரை நிகழ்த்தினார். மனிதநேய தொழிற்சங்க மாவட்ட செயலாளர் A அபுதாஹீர் , மாவட்ட தொண்டரணி செயலாளர் அசாருதீன், விளையாட்டு அணி மாவட்ட செயலாளர் Z.ரியாஸ், மனிதநேய தொழிற்சங்க மாவட்ட துணை செயலாளர்கள் A. இப்ராஹிம், S. முகமது ஆரிப், மற்றும்  அனைத்து கட்சி தலைவர்களும் மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். இறுதியாக ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.