,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முன்பதிவு தொடங்கியது: 15 நிமிடங்களில் அனைத்து டிக்கட்டுகளும் விற்பனை….!

train tickets
Spread the love

அக்டோபர் மாதம் 31-ந் தேதி (வியாழக்கிழமை) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 120 நாட்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன்பாக ரயில்களில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். முன்பதிவு தொடங்கிய 15 நிமிடங்களில் அனைத்து டிக்கட்டுகளும் விற்பனை ஆகி உள்ளன.
அதாவது அக்டோபர் மாதம் 29-ந் தேதி சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு நேற்று ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. தென் மாவட்டங்களுக்கு செல்லும் நெல்லை, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களில் டிக்கெட்டுகள் 15 நிமிடத்திலேயே அனைத்தும் விற்பனை ஆகிவிட்டன.