, , ,

மாநில கல்விக் கொள்கை அறிக்கை! 14 பேர் கொண்ட குழு முதல்வரிடம் சமர்ப்பிப்பு….

NEW EDUCATION POLICY
Spread the love

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்த தமிழக அரசு கடந்த 2022 ஆம் ஆண்டு மாநிலத்திற்கான கல்விக் கொள்கை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 2022 ஜூன் 1 ஆம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. இக்குழு மாநில அரசுக்கான கல்விக் கொள்கையை வடிவமைக்க கருத்துக்கள் கேட்பதோடு, பரிந்துரைகளை வழங்கவும் தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அந்த அறிக்கயில், தமிழ் மற்றும் ஆங்கில மொழி அவசியம். 5 வயது பூர்த்தியானவர்கள் 1 ம் வகுப்பில் சேரலாம். 3,5,8 ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வுகள் கூடாது. கல்லூரிகளில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண்களோடு 11 ஆம் வகுப்பு மதிப்பெண்களும் அவசியம் பொன்ற கொள்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.