,

போலீஸ் அதிகாரிகள் என கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் கும்பல்

balakrishnan
Spread the love
போலீஸ் அதிகாரிகள் என கூறி மிரட்டல் விடுத்து பணம் பறிக்கும் சம்பவங்கள் கோவையில் அதிகரித்து வருகின்றன.

இது குறித்து  கோவை சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது, “அண்மைக் காலமாக பலரிடம் ஒரு கும்பல் பணம் பறித்து வருவது தெரியவந்துள்ளது.அதன்படி அந்த கும்பலில் உள்ள நபர்கள் சம்பந்தப்பட்டவர்களை, செல்போனில் வீடியோ அழைப்பு, ஸ்கைப் செயலியில் அழைக்கின்றனர்.
அப்போது தங்களை போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அல்லது சி.பி.ஐ அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொள்ளும் மர்மநபர்கள் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாக கூறுகிறார்கள்.அந்த பார்சலில் தடைசெய்யப்பட்ட போதைப்பொருள் இருப்பதாகவும், இது தொடர்பாக உங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதாகவும் கூறி போலி ஆவணத்தை காட்டுவார்கள்.போலீஸ் நிலையத்தில் இருந்து பேசுவதைப் போல தெரிய வேண்டும் என்பதற்காக போலியாக போலீஸ் நிலைய பின்னணியை உருவாக்கி போலீஸ் உயர் அதிகாரிகளை போல உடையணிந்து பேசுகிறார்கள்.போதைப் பொருள் கடத்தியதுடன், உங்களுக்கு சர்வதேச போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், உங்கள் மீது நடவடிக்கை எடுக்க போவதாகவும் அச்சுறுத்தி பணம் பறித்து வருகின்றனர்.
போலீசார் யாரும் இப்படி செய்யமாட்டார்கள். பயத்தை ஏற்படுத்தி பணத்தை ஏமாற்றி பறித்து மோசடி செய்வதே இந்த கும்பலின் நோக்கம். கோவை மாநகரில் கடந்த 6 மாதங்களில் மட்டும் இதுபோல 52 புகார்கள் பதிவாகி உள்ளன. முக்கிய பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் என பலரையும் மிரட்டி கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர்.” என்று கூறினர். 
இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறும்போது, பெடக்ஸ்கேன் என்ற பெயரில் போலீஸ்  போலவே  செயல்படும் சைபர் குற்றம் அதிகரித்து உள்ளது. போலியாக போலீஸ் ஸ்டேஷனை உருவாக்கி காவலர் போல செயல்படும் இவர்கள் வீடியோ காலில் மக்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்கள் தெரிகிறது எனவே பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.பெரும்பாலான இவர்களின் நடவடிக்கைகள் வட இந்தியாவில் இருந்து செயல் படுகின்றனர் இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்டுள்ளது. ஒரு வேலை உங்களை அச்சுறுத்தினால் 100 க்கு அழையுங்கள்  என தெரிவித்தார்.