ராயல் கேர் மருத்துவமனையில் 7 வயது சிறுவனுக்கு உயிர் காத்த இதய மாற்று அறுவை சிகிச்சை

Spread the love

கோவை ராயல் கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த 7 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர் மாவட் டத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், விரிவடைந்த இதய தசை நோய் காரணமாக கடுமையான இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவரை காப்பாற்றும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, ராயல் கேர் மருத்துவமனையின் இதயம் மற்றும் இதய நுரையீரல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் தலைமையிலான குழு, குழந்தையை தீவிர கண்காணிப்பில் வைத்து சிகிச்சை அளித்தது. குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், எக்மோ எனப்படும் உயிர்காக்கும் கருவி மூலம் சிகிச்சை வழங்கப்பட்டது.
இதய தானம் கிடைத்ததைத் தொடர்ந்து, மருத்துவர்கள் வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். அறுவை சிகிச்சைக்குப் பின்னர் குழந்தை படிப்படியாக உடல்நலம் பெற்று தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், “குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மிகவும் சவாலானது. சரியான நேரத்தில் எக்மோஆதரவு அளிக்கப்பட்டதும், தகுந்த இதய தானம் கிடைத்ததும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தற்போது குழந்தையின் உடல்நிலை திருப்திகரமாக உள்ளது” என்றனர்.
இந்த சாதனை குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ராயல் கேர் மருத்துவமனையின் தலைமை மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று சிகிச்சை நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தனர்.
இந்த வெற்றிகரமான சிகிச்சை, குழந்தை களுக்கான மேம்பட்ட இதய சிகிச்சை வசதிகளில் கோயம்புத்தூர் நகரம் முக்கிய இடத்தைப் பெற்றிருப்பதை மீண்டும் நிரூபித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *