கோவையின் முன்னணி பல்துறை மருத்துவமனையான கேஎம்சிஹெச் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி மருத்துவர் சிவகுமாரனுக்கு 2025-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த இன்வெண்டரி கண்ட்ரோலர் விருது வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ தொழில் துறையில் பொருளிருப்புக் கட்டுப்பாட்டில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த விருதை, மருத்துவத் துறையைச் சார்ந்த செய்திகள் மற்றும் கட்டுரைகளை வெளியிடும் இன்சைட்ஸ் கேர் என்ற பத்திரிகை நடத்தும் இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமே வழங்கியுள்ளது. மருத்துவத் துறையில் சிறப்பாக செயல்பட்டு அதன் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றும் நபர்களை கௌரவிக்கும் விதமாகவே இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
மருத்துவத் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றுள்ள மருத்துவர் சிவகுமாரன், பல முன்னணி பத்திரிகைகளில் மருத்துவ நிர்வாகம் தொடர்பான கட்டுரைகளை எழுதியுள்ளார். மேலும், பைனான்ஸியல் எக்ஸ்பிரஸ் வழங்கிய ஹெல்த்கேர் விஷனரி விருதையும், வேர்ல்ட் ஹெல்த் மற்றும் வெல்னஸ் காங்கிரஸ் வழங்கிய மோஸ்ட் ஐகானிக் ஹெல்த்கேர் லீடர் குளோபல் விருதையும் பெற்றுள்ளார்.
அதேபோல், பார்ச்சுனா குளோபல் வழங்கிய 2024 ஆம் ஆண்டின் சிறந்த தலைமை செயல் அதிகாரி விருதையும் பெற்றுள்ளார். இவ்விருதை பெறும் இந்தியாவின் முதலாவது மற்றும் ஒரே தலைமை செயல் அதிகாரி என்பதாலும் அவர் தனித்துவமான கௌரவத்தை பெற்றுள்ளார். மேலும், இவ்வாண்டு ஆயுட்கால சாதனையாளருக்கான பிளக்ஸ் குளோபல் விருதும் அவருக்கு கிடைத்துள்ளது.
கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி ஆகியோர், தொடர்ந்து மருத்துவமனைக்கு பெருமை சேர்த்து வரும் மருத்துவர் சிவகுமாரனை பாராட்டியும் வாழ்த்தியும் தெரிவித்தனர்.
தனது நன்றியுரையில் மருத்துவர் சிவகுமாரன், இன்வென்டரி கண்ட்ரோல் என்பது மருத்துவ சேவை துறை நிர்வாகத்தில் ஒரு முக்கியமான செயல்பாடாகும். மருத்துவ நிறுவனத்தின் சிறப்பான செயல்பாட்டிற்கு அது உதவுகிறது. தமது பணிகளுக்கு உறுதுணையாக செயல்பட்டு வரும் கேஎம்சிஹெச் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
கேஎம்சிஹெச் முதன்மை செயல் அதிகாரி மருத்துவர் சிவகுமாரனுக்கு இந்தியாவின் சிறந்த இன்வெண்டரி கண்ட்ரோலர் விருது



Leave a Reply