போதைப்பொருள் வழக்கில் முக்கிய முன்னேற்றம் காணப்படுகிறது. நடிகர் கிருஷ்ணா மீது போலீசாரின் விசாரணை தீவிரமாக இடம்பெற்று வருகிறது. இவர் மீது, போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு நிலவுகிறது.
அதிமுக ஐ.டி. பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாதுக்கு போதைப்பொருள் வழங்கியதாக பிரதீப் என்பவர் கைதாகியிருந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிரபல நடிகர் ஸ்ரீகாந்தும் இந்த வழக்கில் தொடர்புடையவராக வெளியானது. அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, இயக்குநர் விஷ்ணு வர்தனின் சகோதரரும், ‘கழுகு’ பட நடிகருமான கிருஷ்ணாவும், போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதானவர்கள் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கிருஷ்ணா கேரளாவில் தலைமறைவானதாக கூறப்பட்டார். அவரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
நீண்ட நாட்கள் தேடல் பின்னர், போலீசார் அவரை கைது செய்து 17 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Leave a Reply