முதலமைச்சர் கண்பட்டதால் தான் குழப்பங்கள் – அன்புமணி ராமதாஸ்!

Spread the love

பாமக மாநாடு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண் பட்டதால் தான் தற்போது இந்த குழப்பங்கள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடலூர் சென்ற அவருக்கு பாரதி சாலையில் கட்சியினரால் ஜேசிபி மூலம் 40அடி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “கடலூரில் மக்கள் வாழ்வதற்கு காரணம் பாமக தான். பாமக இல்லையென்றால் சஹாரா பாலைவனம் போல் கடலூர் மாறியிருக்கும், பாமக மாநாடு மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண் பட்டதால் தான் தற்போது இந்த குழப்பங்கள், சூழ்ச்சிகள் நிகழ்கிறது என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்ப நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லையா என கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ் இருக்கும் அதிகாரத்தை இல்லை என்றும் சொல்லும் மு.க.ஸ்டாலின் என்றார்.

தொடர்ந்து பேசியவர், பொய்யான ரோட் ஷோ செல்வதை நிறுத்தி மக்களை சந்திக்க மாறுவேடத்தில் செல்லுங்கள், நான்காண்டுகளில் பெரும் பாவத்தை செய்துள்ளீர்கள், இருக்கும் காலத்திலாவது நல்லதை செய்துவிட்டு செல்லுங்கள்.

கரி வெட்டி உள்ளிட்ட என்எல்சி நிலமெடுத்த அனைத்து பகுதிகளிலும் உரிய இழப்பீடு வழங்கி பிரச்னையை தீர்க்காவிட்டால் எத்தனை வஜ்ரா வாகனம் வந்தாலும் எங்களை தடுக்க முடியாது. இறுதியாக எல்லோர் மனதும் பாரமாக உள்ளது. தைரியமாக இருங்கள், நல்லது நடக்கும். 8 மாதத்தில் ஊழலுக்கு எதிரான போர் நடைபெற உள்ளது அதற்கு தயாராகுங்கள் என கட்சியினருக்கு உத்தரவிட்டார்.