,

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் இருநாள் தேசிய கருத்தரங்கம்

Spread the love

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி மன்றம் (AICTE) உதவியுடன் நடத்தப்பட்ட இருநாள் தேசிய கருத்தரங்கம் – “Engineering Evolution: AI & ML across Horizons (NCEE 2025)”  ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி, மின் மற்றும் மின்னணு பொறியியல் மற்றும் மின்னணு தொடர்பியல் ஆகிய துறைகளால் ஒருங்கிணைக்கப்பட்டு உற்சாகத்துடன் நடத்தப்பட்டது.

இவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. அதன்பின் மின் மற்றும் மின்னணு பொறியியல் துறையின் இணை பேராசிரியரான ஜி. கண்ணாயிரம் வரவேற்புரையாற்றினார்.

மேலும் மின்னணு தொடர்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். அனிலா, தலைமை விருந்தினர் கே.டி. சதீஷை அறிமுகம் செய்தார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் தொழில்நுட்பங்களின் மாறுபட்ட பயன்பாடுகள் குறித்து விரிவாக பேராசிரியர் எஸ். சங்கீதா கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தார்.

மேலும், நாட்டின் பல பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டிருப்பதை குறிப்பிட்டார். .

இந்நிகழ்வில் தலைமை விருந்தினர் சதீஷ் , நியூட்டெனின் பொறியியல் கோட்பாடுகளை, நவீன பொறியியல் வளர்ச்சியுடன் இணைத்து பேசினார். பொறியியல் வளர்ச்சி மூன்று முக்கிய கட்டங்களாக – கண்டுபிடிப்பு, பொறியியல், நுண்ணறிவு என வகுக்கப்பட்டதை அவர் விளக்கினார். இவை அனைத்தும் தயாரிப்பு மேம்பாடு மற்றும் பராமரிப்பில் முக்கிய பங்காற்றுகின்றன என்றார். பொறியியல் நுண்ணறிவில் நெறிமுறைகளின் தேவை அதிகரித்து வருவதை அவர் வலியுறுத்தினார்.

மின்னணு தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஆர். ராமகிருஷ்ணன் நன்றியுரையுடன் விழாவை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *