,

தொழிலாளர் குடும்பங்களை விமானத்தில் பறக்க வைத்த கோவை தொழிலதிபர்

flight
Spread the love

கோவை பேரூர் பகுதியில் “பிரியா உணவு கேட்டரிங்” நடத்தி வரும் லட்சுமி ராஜனின் மகனான பிரகாஷ் தேவ் ராஜன் இவரது கேட்டரிங் நிறுவனத்தில் பணிபுரியும் சுமார் 26″க்கும் மேற்பட்ட தொழிலாளர் சொந்தங்களான பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விமானம் மூலம் கேரள மாநிலம் கொச்சினிலிருந்து –  சேலம் வரை பறக்க வைத்து கேரளாவில் உள்ள ஆலப்புழா படகு சவாரியில் இரு நாட்கள் முழுக்க அவர்களின் சுற்றுலா பயணத்தை மேற்கொள்ள வைத்து அவர்களின் மகிழ்ச்சியில் தனது கனவை நிறைவேற்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

தந்தை லட்சுமி ராஜனின் பேரூர் பகுதியில் அமைந்துள்ள பிரியா கேட்ரிங்கிள் பணிபுரியும் தொழிலாளர்கள் – தங்களின் முதலாளியான  லட்சுமி ராஜனின் “ஆறு வயது சிறுவன் பிரகாஷ் தேவ் ராஜன்” பெரிதாகி உன்னுடைய கனவு என்ன என்றும் எங்களுக்கெல்லாம்  செய்யப் போகிறார் என்று எதார்த்தமாக கேட்ட பொழுது – எனது கனவு உங்களையெல்லாம் ஒரு நாள் விமானத்தில் நான் அழைத்துச் செல்வேன் என்று எதார்த்தமாக – ஆறு வயதில் கூறியதை சவாலாகவும் மற்றவர்களுடைய கனவை நினைவாக்கும் விதமாக சுமார் 35″ஆண்டுகளுக்குப் பிறகு தனது தொழிலாளர் சொந்தங்களான – தன்னுடைய தந்தை காலத்தில் பணிபுரிந்த சரோஜினி என்கின்ற 75 வயது பெண்மணி உட்பட சுமார் 26″க்கும் மேற்பட்ட சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விமானத்தில் பறக்க வைத்து அவர்களது அக்கனவை நிறைவேற்றியுள்ளார்.