நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 2059 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் முகவர்கள் முன்பு சீல் வைக்கப்பட்டு கோவை தடாகம் சாலையில் அமைந்துள்ள அரசினர் பொறியியற் கல்லூரி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஸ்டிராங் ரூமில் வைக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் பாடி , மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டன.
Leave a Reply