கோவையில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, பிராத்தனையில் ஈடுபட்டனர்.
இதில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக, கோட்டைமேடு பகுதியில் உள்ள ஹிதாயத்துல் இஸ்லாம் ஷாபிய்யா ஜமாத் நிர்வாகிகள், அண்டை கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு சென்று இனிப்புகள் வழங்கினர். பதிலாக, கோவில் நிர்வாகிகளும் இந்துக்களின் கடவுள் படங்களை வழங்கி, ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நட்பு மற்றும் ஒற்றுமையை போற்றும் தருணம், அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மதங்களை தாண்டிய இந்த நேசபந்தம், கோவையில் சமூக சமரசத்துக்கும் மத நல்லிணக்கத்திற்கும் ஒரு அழகிய உதாரணமாக அமைந்தது.
Leave a Reply