கேஎம்சிஎச் மருத்துவ மனை வளாகத்தில், ‘GYNONC Update 2026’ என்ற தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்கள் மற்றும் மகப்பேறு தொடர்பான புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு முக்கியத் தளமாக இந்த நிகழ்வு அமைந்தது. இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த சிறந்த மருத்துவப் பேராசிரியர்கள் மற்றும் நிபுணர்கள், இத்துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள், சிகிச்சை முறைகள் மற்றும் அறுவை சிகிச்சை நுணுக்கங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினர்.
கேஎம்சிஎச் மருத்துவ மனையின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி கூறியதாவது, “உலகத்தரம் வாய்ந்த மருத்துவச் சேவையை வழங்குவதும், மருத்துவக் கல்வியில் சிறந்து விளங்குவதுமே கேஎம்சிஎச்-ன் நோக்கம். இந்த ‘GYNONC Update 2026’ மாநாடு, தொடர்ச்சியான மருத்துவக் கல்வியில் எங்களுடைய அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவர்களை ஒன்றிணைத்து, கூட்டு முயற்சி, ஆரம்பக்கால நோய் கண்டறிதல் மற்றும் நவீன சிகிச்சைகள் மூலம் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களை ஒழிக்க ஒரு முக்கிய முயற்சியை எடுத்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.
கேஎம்சிஎச் மருத்துவமனையின் செயல் இயக்குநர் டாக்டர் அருண் என். பழனிசாமி கூறியதாவது, “மகப்பேறு புற்றுநோய் சிகிச்சைத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இது போன்ற தேசிய அளவிலான மாநாடுகளை நடத்துவது, நமது மருத்துவர்கள் நவீன சிகிச்சை முறைகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள உதவுகிறது. இங்கு நடைபெறும் ஆழமான விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள், நோயாளிகளுக்குச் சிறந்த சிகிச்சை மற்றும் நற்பலன்கள் கிடைக்க உறுதுணையாக இருக்கும்,” என்றார்.
சாந்தி ஆசிரமத்தின் தலைவரும், புகழ்பெற்ற குழந்தைகள் நல மருத்துவருமான டாக்டர் கெசெவினோ அறம் இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். அவரது வருகை, ஒட்டுமொத்த ஆரோக்கியம், சமூக நலன் மற்றும் பெண்களுக்கான சுகாதாரத் திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
கே.எம்.சி.எச் மருத்துவமனையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்த தேசிய மருத்துவ மாநாடு



Leave a Reply