ஈரோடு எம்பி யாக பதவி வகித்து வருபவர் கணேசமூர்த்தி. 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, மதிமுக சார்பில் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்றார்.
கடந்த ஒரு வார காலமாக கணேசமூர்த்தி கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் இந்நிலையில் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே கட்சியில் ஏற்பட்ட விவகாரங்கள் காரணமாக கணேசமூர்த்தி தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply