Tag: #admk
-
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 37 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு விளாங்குறிச்சி பகுதியில் எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராம், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
-
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி பகுதிகளிலும் மற்றும் தொண்டாமுத்தூர், வேடப்பட்டி பேரூராட்சி பகுதிகளிலும் ரூ. 1.18 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் பூமி பூஜை சிறப்பாக நடைபெற்றது. கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீனாட்சி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை அமைக்கும் திட்டமிடப்பட்டுள்ளது. கோவைப்புதூர் எக்ஸ் பிளாக், செந்தமிழ் நகர், பால்பண்ணை வீதி ஆகிய இடங்களில் நியாய விலை…
-
சென்னை வானகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்றது இக்கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு 3,90,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ஒரு பெரிய திட்டமும் கொண்டு வரவில்லை. நிர்வாக திறமை இல்லாததால் கடன் மட்டுமே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்களை ஏமாற்றி, கொல்லைப்புறமாக தந்திரமாக ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக. அதிமுகவைப் பார்த்து திமுகவிற்கு பயம்…
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி உருவாகி, பட்டியலின மக்கள் பங்கேற்க வேண்டும். இங்கே மன்னராட்சிதான் நிலவுகிறது. கேள்வி கேட்டால் உடனே சங்கி என்கிறார்கள் என்று விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 ஆம் தேதி ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.நடிகர் விஜய் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். வி.சி.க தலைவர் திருமாவளவன் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந் தார். அரசியல் காரணங் களால்…
-
கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி வார்டுகளில் உள்ள சாலைகள் சரி செய்யவும், புதிய சாலைகள் அமைக்கவும், மாநகராட்சி பகுதிகளில் உள்ள மயாணங்களை சீர்படுத்தவும், மழை நீர் வடிகால் அமைக்கவும் மற்றும் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தார் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், உடன் எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் சசிகுமார்.
-
கோவை கவுண்டம்பாளையம் தொகுதிக்கு உட்பட்ட மாநகராட்சி 14 வார்டு வெள்ளகிணறு பிரிவு, உழைப்பாளர் வீதியில் நேற்றைய கன மழையால் பாதிக்கபட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, அதிகாரிகளை அழைத்து உடனே மழைநீர் வடியவும், பாதிக்கபட்ட இடங்களை சரி செய்யவும் கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் அறிவுறுத்தினார். உடன் துடியலூர் பகுதி செயலாளர் வனிதாமணி, 14 வது வட்ட செயலாளர் பிரகாஷ், 1 வது…
-
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளப்பட்டி பகுதி 6 வது வார்டு தாந்தோன்றியம்மன் கோவில் வீதி மற்றும் பரம்சிவன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ:20.70 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு கோவை அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி அருண்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். உடன் காளப்பட்டி பகுதி செயலாளர் ராஜேந்திரன், குறிஞ்சிமலர் பழனிசாமி, வார்டு செயலாளர்கள் சண்முகசுந்தரம் ,…
-
கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான இடத்தை பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராம், ஸ்ரீவாரி ரியல் எஸ்டேட் நிறுவனர் பகவான் தாஸ் ஆகியோர் மோசடி செய்து விற்பனை செய்வதாக கூறி இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காளிகோனார் என்பவரின் வாரிசுதாரர்கள் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது ஒரு வாரிசுதார பெண் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களின் புகாருக்கு மறுப்பு…
-
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்கவும், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் முன்னிலையில் நடைபெற்ற கோவை புறநகர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவிநாசி வடக்கு ஒன்றியம் மற்றும் அவிநாசி பேரூராட்சி சேவூர் பாப்பம்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சிவசக்தி மஹாலில் வளர்ச்சி பணிகள் மற்றும் மக்கள் பணிகள் குறித்து செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசுகிறார்.…
-
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கோவை குனியமுத்தூர் பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கண்டன பதாகைகளை ஏந்தி கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அனைத்து தரப்பு மக்களுக்கும் 100% உயர்வு என்பதை பொறுத்து கொள்ள முடியாது எனவும் வருடா வருடம்…