காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான ஈ.எம். சுதர்சன நாச்சியப்பன் (78) சிவகங்கையில் இன்று காலமானார்.
1999 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்ற இவர், மன்மோகன் சிங் அமைச்சரவையில் மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். மேலும், மாநிலங்களவை உறுப்பினராகவும் செயலாற்றியுள்ளார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் காங்கிரஸ் தொண்டர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.



Leave a Reply