,

நாடு முழுவதும் முதியோர் இல்லங்கள்: ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு!

Spread the love

நாடு முழுவதும் முதியோர் இல்லங்களை அமைப்பது தொடர்பாக, ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதியோர்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, தேவையான வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்களை உருவாக்குவது குறித்து விரைந்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஆதரவற்ற முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *