,

தங்கம் விலை அதிரடி உயர்வு: சவரன் ரூ.1,14,040-க்கு விற்பனை!

Spread the love

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.880 உயர்ந்து ரூ.1,14,040-க்கும், கிராமிற்கு ரூ.110 உயர்ந்து ரூ.14,255-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட மாறுபாடுகளே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த நடுத்தர மக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *