Category: Tamilnadu
-
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தி.மு.க.விற்கு எதிரான வாக்குகளை ஒன்றிணைக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதை வரவேற்றார். அவர் மேலும், “இதில் முதன்மையான பங்கு எனக்கு இருக்கும். எல்லோரும் ஒன்றாக நிற்பார்கள், ஆனால் நான் தனியாக நிற்பேன். நான் மட்டுமே உறுதியுடன் நிற்கிறேன்,” என்று தெரிவித்தார். சீமான், கோவையில் நடைபெறும் நாம் தமிழர் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அ.தி.மு.க.வின் முக்கிய தலைவரான…
-
கோவை ரத்தினபுரி நாராயணசாமி லே-அவுட் பகுதியில் கண்ணன் மற்றும் ராஜசேகர் என்ற சகோதரர்கள், வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி பலரை அதில் சேர்த்தனர். அவர்கள், கேரளா மாநில லாட்டரி குழுக்களை ஒத்த மாதிரியாக, கடைசி மூன்று எண்களுக்குப் பரிசு வழங்குவதாக குழுவில் அறிவித்தனர். இதன்வழியாக பலர் தினசரி பணத்தை இந்த இருவருக்கும் அனுப்பினர். பெரும்பாலானவர்களுக்கு பரிசு கிடைக்காமல், சிலருக்கு மட்டுமே பரிசுத்தொகை ஆன்லைன் மூலம் அனுப்பப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்படுவதாக தகவல் ரத்தினபுரி காவல் துறைக்கு…
-
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கூட்டணி குறித்து தாம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் தெளிவாக கூறியிருப்பதை, அ.தி.மு.க பெயரை எங்கும் குறிப்பிடவில்லை என்பதை வலியுறுத்தினார். விவாதம் (Debate) ஏற்படுத்தவே சிலர் திட்டமிட்ட முறையில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார். “நான் கூறிய கருத்துகளையும், எடப்பாடியார் தெரிவித்த கருத்துகளையும் திரித்து, வாதம் செய்யவே சிலர் முயற்சி செய்கிறார்கள். பாஜக குறித்து நான் தெளிவாக எடுத்துரைத்துள்ளேன், அதேபோல் எடப்பாடியாரும் அ.தி.மு.க குறித்து தன்னுடைய நிலைப்பாட்டை விளக்கி…
-
வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறி வைத்து த.வெ.க இயங்கி வருகிறது. இதற்காக, முழு மூச்சில் அந்த கட்சி களம் இறங்கியுள்ளது. கூட்டணிக்கான பேரங்களையும் கவனமாக ஆராய்ந்து வருகிறது. அனைத்து தரப்பு மக்களையும் கவர திட்டங்களை போட்டு வருகிறது. ரமலான் மாதத்தை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் நேற்று இஸ்லாமிய மக்களுடன் நோன்பு திறப்பு விழாவில் விஜய் பங்கேற்றார். இப்படியாக த.வெ.க கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் களத்தில் முன்னோக்கி பாய்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை நடந்த…
-
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் நடித்துள்ள ’பைசன்’ (காளமாடன்) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. நீலம் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் அப்லாஸ் எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் மகன் துருவ் நடித்துள்ள திரைப்படம் ‘பைசன்’ இந்த படத்தில் ரஜிஷா விஜயன் மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கலையரசன், பசுபதி, லால், அழகம் பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே…
-
துபாயில் இருந்து 14 கிலோ தங்கக் கட்டிகளை கடத்தி வந்த கன்னட நடிகை ரன்யா ராவ் கடந்த 3ம் தேதி பெங்களூருவில் கைது செய்யபட்டார். சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க தொடையில் தங்கக் கட்டிகளை ஒட்டி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. அவரது ஆடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கத்தை பறிமுதல் செய்த பின்னர், வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) அதிகாரிகள் அவரைக் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இப்போது, விசாரணைக்காக ரன்யா ராவின் மொபைல்…
-
தமிழகத்தில் மும்மொழி கல்வி கொள்கைக்கு ஆதரவாக, ‘சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற கருப்பொருளில் தமிழ்நாடு பாஜக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இத்தகவலை மக்களிடம் கொண்டு சென்று, 1 கோடி கையெழுத்துகளை பெற்ற பின்னர், மே மாத இறுதிக்குள் ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க பாஜக திட்டமிட்டுள்ளது. கோவை வந்த மத்திய இணை அமைச்சர் முருகன், இந்த இயக்கத்திற்கு மக்கள் மத்தியில் மாபெரும் ஆதரவு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், மும்மொழி கல்வி அனைத்து மக்களுக்கும் கிடைக்க…
-
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், மகளிர் மேம்பாட்டு மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கல்லூரி கலையரங்கில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் தலைமை வகித்தார். கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மையத் தலைவர் முனைவர் ஜி.கவிதா ஆண்டறிக்கை வாசித்தார். தேகா ஆர்கானிக்ஸ் நிறுவனர் ஆர்த்தி ரகுராம், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மகளிர் மேம்பாட்டு மைய சாதனை மலரை…
-
கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் பத்தொன்பதாம் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமையேற்று அனைத்து பட்டதாரிகளையும் வாழ்த்தி, கல்வியில் சிறந்து முதலிடம் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு தங்கப்பதக்கமும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்தார். மேலும் தனது உரையில், கல்விசார் சிறப்பு மற்றும் முழுமையான வளர்ச்சிக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். சமூகத்திற்கு நேர்மறையாக பங்களிக்கும் பட்டதாரிகளை வடிவமைப்பதில் SRIT பெருமை கொள்கிறது என்று…
-
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் மிகப்பெரிய இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தவெக தலைவர் விஜய் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் இணைந்து நோன்பு கஞ்சி பருகி நோன்பை திறந்தனர். நிகழ்ச்சிக்குப் பின்னர், தவெக சார்பில் மட்டன் பிரியாணி வழங்கப்பட்டு, அனைவரும் ஒன்றாக உணவருந்தினர். நோன்பு திறப்பு விழா முடிந்த பிறகு, தவெக தலைவர் விஜய், இஸ்லாமிய மக்களைப் பிரமிப்பூட்டும் வகையில் உரையாற்றினார். அவர் கூறியதாவது: “என்…