Category: crime

  • ஆம்ஸ்ட்ராங் படுகொலை விவகாரம்  ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுனர்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

    ஆம்ஸ்ட்ராங்கின் கவனத்தை திசை திருப்பி பின்புறமாக இருந்து இடது பக்கமாக கழுத்தில் வெட்டிய கொலையாளிகள்   பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை என்பவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல கடந்த ஒரு வார காலமாக நோட்டமிட்டது விசாரணையில் அம்பலம். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில்…

  • தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது-தமிழக அரசு தெரிவிப்பு

    தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் பத்திரப்படுத்தப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் நிஜாமுதீன் தாக்கல் செய்த மனுவில் துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில், போலீஸ் நிலையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகள் திருத்தப்பட்டதாக, செய்திகள் வெளியாகின. இதேபோல, போலீஸ் நிலையங்களில் நடக்கும் அத்துமீறல்களை கண்காணிக்க, ‘சிசிடிவி’ என்ற கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதுடன், அந்தப் பதிவுகளை பத்திரப்படுத்த, உரிய…

  • இன்று முதல் அமலுக்கு வருகிறது ஜீரொ எப் ஐ ஆர் முறை…..

    மத்திய அரசின் புதிய குற்றவியல் திருத்த்த சட்டங்கள் இன்று (ஜூலை 1 ) முதல் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் கடந்த 150 ஆண்டுகளாக இந்தியாவில் நடைமுறையில் இருந்த பழைய சட்டங்கள் இன்றுடன் முடிவுக்கு வருகின்றன. இந்த சட்டங்களில் பல முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. குறிப்பாக பழைய சட்டங்களில், குற்றம் நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் மட்டும் தான் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய முடியும். ஆனால், இன்று அமலுக்கு வந்துள்ள புதிய…

  • சோழவந்தானில் பயங்கரம் 8 மாத பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற தந்தை கைது :

    மதுரை, சோழவந்தானில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, பெண் குழந்தையை ரோட்டில் வீசி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . மதுரை மாவட்டம், சோழவந்தான் பசும்பொன் நகரை சேர்ந்தவர் விக்கி என்ற விக்னேஷ் வயது 24. தென்னை மட்டை உரிக்கும் தொழில் செய்து வரும் இவர் ,இதே ஊரைச் சேர்ந்த நாகசக்தி வயது 21. என்பவரை கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களது இவர்களுக்கு ஏற்கனவே ஒன்றரை வயதில் மகன் கிசான்…

  • ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ ஏடிஎஸ்பி வெள்ளதுரை சஸ்பெண்ட் !

    ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என அறியப்பட்ட ஏடிஎஸ்பி-யான வெள்ளதுரை இன்று பணி ஓய்வு பெற இருந்த நிலையில் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரிவில் ஏடிஎஸ்பி-யாக பணியாற்றி வந்தவர் வெள்ளதுரை. காவல் உதவி ஆய்வாளராக தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்த வெள்ளதுரை பத்துக்கும் மேற்பட்ட என்கவுன்டர் சம்பவங்களில் இவருடைய பங்கு இருந்தது. இதை அடுத்து தமிழக போலீஸாரால் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என வெள்ளதுரை அறியப்பட்டு வந்தார். இன்று அவர் பணி ஓய்வுபெறவிருந்த இந்நிலையில் அவரை…

  • முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் கைது!

    முன்னாள் மனைவி பீலா ராஜேஷ் உடனான மோதலைத் தொடர்ந்து, வீட்டின் வாட்ச்மேனை தாக்கிய குற்றச்சாட்டில், முன்னாள் டி.ஜி.பி. ராஜேஸ் தாசை சென்னை காவல்துறை கைது செய்துள்ளது.    பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய முன்னாள் டிஜிபி ராஜேஸ்தாஸ்க்கு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஆனால், உச்சநீதிமன்றம் ராஜேஸ்தாஸ் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்ததுடன், அவர் சரணடையவும் தடை போட்டுள்ளது.  இந்த நிலையில், அவரது பண்ணை வீடு தொடர்பாக, அவருக்கும் அவரது முன்னாள் மனைவி பீலா ராஜேஸ்…

  • கஞ்சா வழக்கில் சவுக்கு சங்கருக்கு 2 நாள் போலீஸ் காவல்: மதுரை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

    பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த மூன்றாம் தேதி கோவை சைபர் போலீசார் கைது செய்தனர். சவுக்கு சங்கர் தேனியில் கஞ்சா வைத்திருந்ததாகவும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது, சவுக்கு சங்கரின் காரில் இருந்த அரை கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சவுக்கு  சங்கர் மற்றும் அவருடன் இருந்த பிரபு, ராஜரத்தினம் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.…

  • பெண் போலீசார் உதவியுடன் கோவையில் இருந்து  திருச்சிக்கு அழைத்து செல்லப்பட்டார் சவுக்கு சங்கர்.

    பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனலில் கடந்த அக்டோபர் மாதம் சவுக்கு சங்கர், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பற்றி அவதூறு பரப்பி இழிவுபடுத்தும் வகையில் பேட்டி கொடுத்ததாகவும், இரு பிரிவினரிடையே கலவரத்தை…

  • கோவை சீர்திருத்தப்பள்ளியில் சிறுவன் தற்கொலை முயற்சி

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை பகுதியில் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 6 இளைஞர்களும் 3 சிறார்களும் என மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டனர்.கைதான இளைஞர்கள் ஆறு பேர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மூன்று சிறார்களும் கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இந்நிலையில் 17 வயது சிறுவன் ஒருவர் நேற்றிரவு கைகளை கழுவுவதற்கு பயன்படுத்தப்படும் சோப்பு ஆயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை…

  • கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட்​டை விற்க முயன்ற வடமாநிலத்தவர் கைது

    ​கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட்​டை விற்க முயற்சி செய்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மோகன் (50) என்பவரை காவல் துறையினர் கைது செய்து செய்தனர். கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் காவல் துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று கோவில்பாளையம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனைக்கு வைத்திருப்பதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்…