கோவை கேலக்ஸி மீடியா என்ற அமைப்பு சார்பில் 1008 திருவிளக்கு வழிபாடு மற்றும் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்த 51 பெண்களுக்கு மகா சக்தி எனும் விருது வழங்கும் விழா கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் கோவை பேரூராதீனம் தலைமையில் 5 ஆதீனங்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற நிலையில் 1008 பெண்கள் கலந்துகொண்டு திருவிளக்கு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
முன்னதாக கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் கோ பூஜை நடத்தப்பட்டு வேத விற்பன்னர்களின் மந்திரங்கள் முழங்க சிறப்பான வழிபாடு நடத்தப்பட்டது.அதில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் வெள்ளி நாணயத்துடன் 16 வகையான தாம்பூல பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்த சேவை புரிந்த சாதனையாளர்களாக விளங்கிய 51 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மகாசக்தி எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.இந்த விழாவில் 2000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேரூர் ஆதீனம் திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அவிநாசி வாசிஸர் மடாலயம் திரு ஸ்ரீ ல ஸ்ரீ காமாட்சி தாஸ் சுவாமிகள், தென்சேரி ஆதீனம் திரு முத்து சிவராமசாமி அடிகளார் மற்றும் கோவை காமாட்சிபுரி ஆதீனம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், கோவை கேஜி மருத்துவமனை நிறுவனர் ஜி. பக்தவச்சலம், ஜிகே.நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவின் முத்தாய்ப்பாக விழா தொடங்கியவுடன் கருமேகங்கள் சூழ்ந்து விழாவை ஆசிர்வதிக்கும் வண்ணம் மழை பொழிந்தது. இதனால் அங்கு கூடியிருந்த பெண்கள் பக்தி பரவசம் அடைந்தனர்.
Leave a Reply