தமிழக அரசு ஆதரவுடன், டைட்டன் நிறுவனத்தின் நிதி உதவியுடன் 3700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடையும் படி புனரமைப்பு
கோவையில் நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்று சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வரும் சிறுதுளி அமைப்பானது, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் டைட்டன் கம்பெனி உடன் இணைந்து கோவை தொண்டாமுத்தூர், மத்துவராயபுரம் பஞ்சாயத்தில் உள்ள நொய்யல் ஆற்றின் முக்கிய கிளை நீரோடையான மசஒரம்பு நீரோடையை புனரமைத்துள்ளது.
இதன் திறப்பு விழா இன்று (11.6.25) நீரோடை பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. சி.கே. வெங்கட்ராமன் அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு திட்டத்தை திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக தமிழக சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், இ.ஆ.ப., நீர்வள துறையின் கோயம்புத்தூர் மண்டல தலைமைப் பொறியாளர், திரு முருகேசன் பங்கேற்றனர். இந்த நிகழ்வு சிறுதுளியின், தலைவர் திரு எஸ் வி பாலசுப்ரமணியம், நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த அமைப்பின் அறங்காவலர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். மசஒரம்பு நீரோடை நொய்யல் ஆற்றின் 34 கிளை நீரோடைகளில் ஒன்றாகும்.மொத்தம் 5.7 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த நீரோடையின் வழித்தடத்தில் 7 தடுப்பணைகள் உள்ளன. நீண்ட காலமாக தூர்வாராபாடாததால் வண்டல் மண் படிந்து அவற்றின்கொள்ளளவு கணிசமாக குறைந்தது.
சிறுதுளி டைட்டன் கம்பெனி – ன் நிதி உதவியுடன் கடந்த ஜனவரி மாதத்தில் புனரமைக்கும் பணியை துவங்கியது.இந்த நீரோடையின் முழு நீளத்திலும் அடர்ந்த புதர்கள் அகற்றப்பட்டு,நீரோடையை தூர்வாரி ஆழப்படுத்தப்பட்டு அகலப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் 7 தடுப்பணைகளையும் மறுசீரமைத்து வலுப்படுத்திப்பட்டுள்ளது. இதன் மூலம் 10 கோடி லிட்டர் நீர் சேமிப்பு திறன் உருவாக்கப்பட்டுள்ளது.வன விலங்குகளுக்கு நீர் ஆதாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் மனித-விலங்கு மோதல்கள் மற்றும் வன விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் கணிசமாக குறையும்.9 கிராமங்களில் உள்ள 3700 ஏக்கர் விவசாய நிலங்களுக்கு இத்திட்டம் பயனுள்ளதாக அமையும்.
“இந்த புனரமைப்பு பணியானது நிலத்தடி நீர் மட்டம் உயர்வதை உறுதி செய்யும் மற்றும் 100 விவசாயிகள் பயனடைவர்.இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் பகுதியின் நீர் பிடிப்பு பகுதி அதிகரிக்கப்பட்டுள்ளது மேலும் இதுபோன்ற திட்டங்கள் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்கவும் உதவிசெய்கிறது.மேலும் இந்நீரோடையில் கூடுதலாக 3 தடுப்பணைகள் கட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.” என திருமதி வனிதா மோகன் கூறினார் .
Leave a Reply