கோவையில் இருந்து பணம், தங்கம் கடத்தல் – மூவர் கைது

Spread the love

கோவையில் இருந்து பணம் மற்றும் தங்கம் கடத்திய மூன்று பேரை கேரள மாநில காவல்துறையினர் கைது செய்தனர்.

கேரள மாநிலம் வேலந்தாவளத்தில், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமாக கடத்த முயன்ற ரூ​ 70 லட்சம் ரொக்கப் பணமும், 200 கிராம் தங்கமும் மாவட்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவையைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கோவையை சேர்ந்த சாகர், மணிகண்டன் மற்றும் சந்தீப் ஆவர். இவர்கள் மூவரும் தங்கத்தையும், பணத்தையும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்றதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.