ஆபரேஷன் சிந்தூர்:  கோவை ரயில் நிலையத்தில் பயணிகளை தீவிர சோதனைக்குப் பின்னர் அனுமதி

railway station
Spread the love

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக திட்டமிட்டு இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.​ நேற்று நள்ளிரவு பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிகிறது. ​இதனையடுத்து கோவை ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடைமைகள் ரயில்வே காவல் துறையினர் தீவிர சோதனைக்கு பின்னரே, ரயில் நிலையத்திற்குள் அனுமதி அளித்து வருகின்றனர். மேலும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பயணிகளை தீவிர கண்காணித்து பணியிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.