மாற்றுத்திறனாளிகளுக்காக ரயில் நிலையத்தில்24 இடங்களில் மொபைல் சாய்தள வசதி ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு

swarga foundation
Spread the love

ஸ்வர்கா அறக்கட்டளை மற்றும் சர்வதேச ரத்தினவியல் நிறுவனம் (இந்தியா) இணைந்து, பாலக்காடு ரயில் நிலையத்தில் “சுகம்யா திட்டம்” என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தின் துவக்க விழா, மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைவான இயக்கம் உள்ள பயணிகளுக்கான ரயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றும் முயற்சியாக அமைந்தது. இந்தத் திட்டத்தின்கீழ், நாட்டிலேயே முதல் முறையாக பாலக்காடு ரயில் நிலையத்துக்கு முதல்முறையாக மொபைல் சாய்வுதளங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் அருண் குமார் சதுர்வேதி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சந்தோஷ் சுப்பிரமணியன், ஜனகல்யாண், அருண் தாமஸ், மூத்த பிராந்திய வணிக மேலாளர், பாலக்காடு ரயில்வே பிரிவு மற்றும் ஸ்வர்கா ஃபவுண்டேஷன் ஸ்வர்ணலதா குருபிரசாத் உடனிருந்தனர்.
பாலக்காடு ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில் பெட்டிகளில் தடையின்றி ஏறவும், இறங்கவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட எடை குறைந்த சிறிய சாய்வுதளங்கள் நிறுவப்பட்டுள் ளன. இவை ரயில் நுழைவாயில்களுக்கு அருகேவைக்கப்பட்டு, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கின்றன. வசதியான இயக்கத்திற்கும், சுயாதீனமான பயண அனுபவத்திற்கும் ஏற்ப, புதிய சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. பயணிகள் இந்நாற் காலிகளை பயன்படுத்தி நிலைய வளாகத்தில் சீராக இயங்கவும், ரயில்களில் தடையின்றி ஏறவும் இயலும்.
இந்தத் திட்டத்தின்கீழ், பாலக்காடு கோட்டத்தின் எல்லா ரயில் நிலையங் களிலும் 24 மொபைல் சாய்வுதளங்களும் 24 தனிப்பயனாக்கப்பட்ட சக்கர நாற்காலிகளும் ஒப்படைக்கப்பட்டன.