பொது சுகாதாரமும் நோயாளிகளின் பாது காப்பும் தொடர்பாக ஒரு முக்கிய முன்னேற்றமாக, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இந்தியா
வில் முதன்முறையாக பிளாஸ்மா ஷீல்ட் எனும் நவீன தொற்றுநோய் கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நவீன தொழில்நுட்பம், மருத்துவ
மனைகளில் பரவும் உயிர்க்கிருமிகளை நேரடியாக அழிப்பதன் மூலம் தொற்றுகுறையும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் இந்திய அரசின் ஆதரவுடன் இயங்கும் Eta ப்யூரிபிகேஷன் எனும் புதிய தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டமைப்பாக செயல் படுத்தப்படு கிறது. பிளாஸ்மா தொழில்
நுட்பம் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த முறை, மருத்துவமனை சூழலை மேலும் பாதுகாப் பாக இருக்க உதவுகிறது. மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாகஇயக்குநரான டாக்டர் க.மாதேஸ்வரன் கூறும்போது,“எங்கள் நோயாளிகள் சிறந்த சிகிச்சையை பெறுவதை உறுதி செய்யும் வகையில், நாட்டில் முதன்
முதலாக இந்த முன்னேற்ற மான திட்டத்தை அறிமுகப் படுத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
நோய்த் தாக்கங்களைத் தடுக்க வேண்டும் என்பது நோயாளி பாதுகாப்பின் அடித்தளமாகும். இதை முன்னிறுத்தும் வகையில், நவீன தொழில்நுட்பத்தை கொண்டு முன்னோடியாக செயல்படுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார்.
சென்னையை தவிர தமிழ் நாட்டில் முதன்முறையாக ஜேசிஐ தங்க முத்திரை அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையாகவும், இந்த திட்டம் ஆயிரக்கணக்கான நோயாளிக
ளுக்கு பயன்படக் கூடியதுடன், இந்தியா முழுவதும் மற்ற மருத்துவமனைகளும் கடைபிடிக்கக்கூடிய ஒரு முன்மாதிரியாகவும் அமையும். ‘இது எங்கள் மருத்துவமனைக்கு மட்டு
மல்ல; இந்திய சுகாதாரத் துறைக்கும் ஒரு மைல்கல் நேரமாகும்,” என டாக்டர் மாதேஸ்வரன் குறிப்பிட்டார்.
இந்த முன்னோடியான நடைமுறை, இந்திய மருத்துவத்தில் புதிய தரநிலைகளை நிலை நிறுத்தும் வகையில், ராயல் கேர் மருத்துவமனையின் புதுமை சார்ந்த நோக்கத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
ராயல் கேர் மருத்துவமனையில் பிளாஸ்மா ஷீல்ட் தொற்றுநோய் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம் அறிமுகம்

Leave a Reply